districts

img

செம்மொழிப் பூங்கா பணிகள் விரையில் முடிவுறும்

கோவை, ஆக. 21- கோவையில் நடைபெறும் செம்மொழிப் பூங்கா பணி கள் அடுத்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டு இருப்பதாக சட்டமன்ற உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள்  குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் புத னன்று (ஆக.21) ஆய்வு மேற்கொண்டனர். அந்தக் குழு வின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கோவை காந்திபுரம் அருகே சிறைச்சாலை வளாகத்தில்  நடை பெறும் செம்மொழிப் பூங்கா பணிகளை நேரில் ஆய்வு  செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன் கூறியதாவது, தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்கள் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்ப டுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந் துள்ளோம். இதன் ஒருபகுதியாக கோவையில் செம் மொழிப் பூங்கா அமைப்பது தொடர்பான உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த பூங்கா அமைக்க நடை பெறும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளித்து இருக் கின்றனர். இது மொத்தம்  165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள சிறைச்சாலையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்தவு டன் முழுமையாக 165 ஏக்கரில் பணிகள் நடைபெறும்.  தற்போது முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் செம் மொழிப் பூங்காவிற்கான பணிகள் நடைபெற்று வருகி றது. சிறைச்சாலையை வேறு பகுதிக்கு மாற்றும் பணி கள் நடைபெற்று வருகின்றது. தற்போது செம்மொழி பூங்கா பணிகள் 35 சதவீத நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து, காவலர்களுக்கான குடியி ருப்பு கட்டும் பணி, அரசு மருத்துவமனையில் நடைபெ றும் பணிகள், மேற்கு புறவழிச்சாலைப்பணிகள், பாரதி யார் பல்கலை கழகம், மருதமலை உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை இந்த குழுவினர்  பார்வையிட்டனர்.