தாராபுரம், டிச - 7 தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத் திலும், பஞ்சாயத்துத் தலைவர் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். தலைவர் மற் றும் உறுப்பினர்களிடையே நடக்கும் மோதல் போக்கால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட் டுள்ளது என பொது மக்கள் குற்றஞ்சாட்டி னர். கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவ ராகச் செல்வி ரமேஷ், துணைத்தலைவராக நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர்களாக தன லட்சுமி, நர்மதா, தமிழ்செல்வி, சரஸ்வதி, குப்புசாமி, புனிதா, அபிநயா உள்ளிட்டோர் உள்ளனர். இந்த ஊராட்சியில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல செவ்வாயன்று மாதாந் திர கூட்டம் நடைபெறுவதாக அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி செவ்வாயன்று காலை 10 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் வந்தனர். காலையில் 11 மணிக்கு ஊராட்சி மன்ற தலை வர் செல்வி ரமேஷ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது வார்டு உறுப்பினர் கள் கடந்த 2 மாதமாகக் கூட்டத்தை ஏன் நடத்த வில்லை எனவும், கடந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது எனத் தலைவர் செல்வி ரமேஷிடம் கேள்வி எழுப்பினர். ஊராட்சி பகுதியில் நரிக்குறவர் காலணி, பெஸ்ட் நகர், ராம்நகர், பாலசுப்ரமணியம் நகர், மாருதி நகர் உள்ளிட்ட நகரில் கடந்த மூன்று ஆண்டு காலமாக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என நகராட்சி உறுப்பி னர்கள் அனைவரும் குற்றம் சாட்டி பேசிய தாகக் கூறப்படுகிறது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் வார்டு உறுப்பி னர்கள் கூட்டத்திற்குக் கலந்து கொள்கின்ற னர். ஆனால் தீர்மானத்தில் கையெழுத்திடு வதில்லை. அதனால் தான் வளர்ச்சி பணி களை முழுமையாகச் செயல்படுத்த முடிய வில்லை எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வார்டு உறுப்பினர்கள், நாங்க ளும் ஒவ்வொரு முறையும் தீர்மானத்தில் கையெழுத்து இட்டுச் சென்றாலும் பணிகள் நடைபெறுவதில்லை. கையெழுத்திட்ட தீர் மான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்களிடையே கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது என தெரிவித்து அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி தலை வர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் உடனடியாக தனது இருக்கையை விட்டு எழுந்து அலுவலகத்திற்கு வெளியே வந்து வாசல் முன் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவ லர் கே.கே. ஜீவானந்தம் இருதரப்பினரி டையே பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இதுகுறித்து முடிவு எடுப்பதாகக் கூறி போராட் டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண் டார். ஆனால் இருதரப்பினரும் இதை ஏற்றுக் கொள்ளாமல் இரவு 9 மணி வரை போராட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் தலை யிட்டுத் தீர்வு காணவேண்டும் என கோரி போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலு வலர் புதனன்று தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்ததைத் தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டனர். புதனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஊராட்சி தலை வர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தனிக் கவனம் செலுத்தி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கு ஏற்ப டும் மோதல் போக்கை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுண்டச்சிபுதூர் ஊராட் சியில் போதிய நிதி ஆதாரம் இருந்தும் இருத ரப்பினரும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவ தால் மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது எனப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.