உடுமலை, பிப்.12- உடுமலை வனச்சரக எல்லை கிராமங்களில், வனவிலங்கு கள், காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்குகளால் ஏற்படும் விளைநிலங்கள், பயிர் சேதங்களுக்கு உரிய நேரத்தில் நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். உடுமலை வனசரக அலுவலகத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவ சாயிகளுடன் ஆலோசனை செய்யும் வகையில் புதனன்று உடு மலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காட்டுப்பன்றி மற்றும் இதர வனவிலங்குகள் விவசாயிகளின் விளை நிலங்கள் மற்றும் மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க வேண் டும். விலங்குகளால் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறை விவசா யிகளுக்கு தரும் இழப்பீடு தொகையை தற்போதைய சந்தை மதிப்பில் தரும் வகையில் உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து பேசிய வனச்சரகர் மணிகண்டன் விவசா யிகளின் கோரிக்கைகளை உயர் அலுவலர்ளுக்கு தெரிவிக் கப்படும். வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தி யது குறித்து இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்யாத விவ சாயிகள் உடனடியாக விண்ணப்பம் செய்தால் உரிய முறை யில் பரிசீலனை செய்யப்படும். மேலும் இனி வரும் காலங்க ளில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெ றும் என்று தெரிவித்தார்.