உடுமலை, மார்ச் 6 - ஓய்வுபெறும் அன்றே பணப்பலன் களை வழங்க வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் வாக னப் பிரச்சாரம் மேற்கொண்டனர். போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு ஓய்வுபெறும் அன்றே பணப்பலன் களை வழங்க வேண்டும் என சிஐடியு சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் மார்ச் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இதன் தொடர்சியாக உடுமலை பகு திக்கு வருகை தந்த வாகனப் பிரச்சா ரத்திற்கு உடுமலை நகர எல்லையான கொல்லம்பட்டரை பகுதியில் வரவேற்பு தரப்பட்டது. பின்னர் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைளை விளக்கி உடுமலை பழைய பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் முன்பாக பிரச்சாரம் செய்யப் பட்டது. சிஐடியு மண்டல பொதுச்செயலா ளர் பி.செல்லதுரை, பொருளாளர் என்.சுப்பிரமணியம் உள்ளிடோர் பங்கேற்ற இந்த பிரச்சாரத்தில், ஓய்வுபெறும் போதே போக்குவரத்து தொழிலாளர் களுக்கு கிடைக்க வேண்டிய பணப்ப லன்களை உடனே வழங்க வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண் டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண் டும். நிலுவையில் உள்ள காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும். தொழிலா ளர் விரோதமாக செயல்படும் அதிகாரி கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, இந்த பிரச்சாரத்தில் மண்டல துணை பொதுச் செயலாளர் வே.விஸ்வநாதன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன், மோட் டர் சங்க தலைவர் சுதா சுப்பிரமணியன், உடுமலை போக்குவரத்து சிஐடியு கிளையின் துணை தலைவர் செவந்தி சீனிவாசன், கிளை தலைவர் பாபு, கிளை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர் வாகிகள் பெரிய மயில்சாமி, ஜோதி கண் ணன், செந்தில், சிவக்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டானர்.