districts

img

சங்கரய்யா மறைவு: சிஐடியு அஞ்சலி

ஈரோடு, நவ.24- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்க ரய்யாவின் மறைவிற்கு, சிஐடியு இரங்கல் தெரிவித்துள் ளது. இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) ஈரோடு மாவட்ட  சிறப்பு பேரவை கூட்டம் ஈரோடு, வி.பி.சிந்தன் நினைவகத்தில், மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரை யாற்றினார். முன்னதாக, விடுதலை போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச் சியில் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், பொரு ளாளர் செந்தில், துணைத்தலைவர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரளான ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிஐடியு செய்தி ஆண்டு சந்தா 200க்கான தொகை வழங்கப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி  வி.ராஜேந்திரன் - அமுதா திருமணத்தையொட்டி, நிர்மல்  பள்ளி நிதியாக ரூ.5000 வழங்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி பொன்.பாரதி, டிஆர்இயு ரங்கநாயகி இணையர்கள் திருமண நாளையொட்டி உடல்தானம் செய்த தற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் தோழர் என்.சங்கரய்யாவின் படத்திறப்பு நிகழ்ச்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்தூர் அலுவலகத்தில் வியா ழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன் தலைமை வகித்தார். சங்கரய்யா படத்தை திறந்து வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங் உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், தாலுகாக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.