திருநெல்வேலி, தூத்துக்குடி எல்லையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. சமீபத்தில் பெய்த கடும் மழையால் இப்பகுதி கடும் பாதிப்புக்குள்ளானது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் நிவாரண பொருட்கள் ஏதும் போய்ச்சேராத நிலையை அறிந்து, சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆயிரம் போர்வைகள் மற்றும் நிவாரண பொருட்க ளுடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழங்கினர். இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்அந்தோணி ராஜ் மற்றும் ராமகிருஷ்ணன், செந்தில்பிரபு, விஜயராகவன், இப்ராகிம் செரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.