சேலம், நவ, 8- கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான குடோன்களில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு இறக்கு கூலியை உயர்த்தி தர வேண்டும் என பல கட்ட போராட் டங்களை சிஐடியு நடத்தி வந்தது. இருப் பினும், டாஸ்மாக் நிர்வாகம் சுமை பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. ரூ5.50 பைசாவில் இருந்து 9 ரூபாய் ஆகவும், ரூ4 லிருந்து ரூ8 ஆக கூலி உயர்வு ஒரு பெட்டிக்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை தமிழக அரசு மற் றும் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத் தாவிட்டால் வரும் 29ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா கவும், கவனத்தை ஈர்ப்பதற்காக 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிஐ டியு டாஸ்மாக் சுமைப்பணி சம்மேள னம் அறிவித்திருந்தது. இதன்தொடர்ச்சியாக, சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழி லாளர்கள் சங்கம் சார்பில் கூலி உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டை யாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலை வர் சிவக்குமார் தலைமை ஏற்றார்.
இதில், சுமைப்பணி சம்மேளன மாநில தலைவர் ஆர்.வெங்கடபதி, சிஐ டியு சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்ட குன்னூர் வண்டிச் சோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி சங் கத்தின் தலைவர் ரங்கசாமி தலைமை ஏற்றார். இதில், சுமை சங்க நிர்வாகி லட்சு மணன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.வினோத், சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.நவீன் சந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முடிவில், ரமேஷ் நன்றி கூறினார். கோவை கோவை பீளமேடு டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பொதுச்செயலாளர் எம்.எஸ்.பீர்முகம்மது தலைமை ஏற்றார். இதில், செயலாளர் எம்.எஸ்.ஜஹாங்கீர், பொருளாளர் ஏ.அபுதாகீர் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், திரளான டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழி லாளர்கள் பங்கேற்றனர். இதே போன்று, கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.