சேலம், அக்.31- ஏற்காட்டில் பழங்குடியின மக் களின் நலனை பொருட்படுத்தா மல், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக தார்ச்சாலை அமைத்த ஆட்சியரை கண்டித்து சிஐடியு சார்பில் சேலம் கோட்டை மைதா னத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், கடந்த 40 ஆண்டுகளாக கரடு, முரடான 6 ஆம் நம்பர் மண்சாலையை பயன் படுத்தி வருகின்றனர். அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மழைக்காலங்களில் மண்சாலை பழுதடைந்து மலை கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். இதனிடையே தார்ச்சாலை அமைக்க போராட்டம் நடத்திய பிறகு, 1995 ஆம் ஆண்டு எஸ்டேட் முதலாளிகளும், ஊர் பொது மக்களும் 6 ஆம் நம்பர் சாலையை பயன்படுத்த எழுத்துப்பூர்வமாக இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இருப்பினும் மாவட்ட நிர் வாகம் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில், தோட்ட தொழிலா ளர் சங்கத்தினர் எடுத்த முயற்சியின் அடிப்படையில், மாவட்ட நிர்வா கம் 6 ஆம் நம்பர் சாலையை தார்ச் சாலையாக மாற்ற முடிவு எடுத்தது. அதற்காக ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் பழங்குடியினர் நலத் துறையிடமிருந்து தேவையான தொகையை பெற்றுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வந்த மாவட்ட ஆட்சியர் 6 ஆம் நம்பர் சாலை அமைக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், யாருக் கும் பயனில்லாத 7 ஆம் நம்பர் பீல்ட் சாலையை அமைத்துள்ளார். எஸ் டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக 18 கிராம பழங் குடியின மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர். மேலும், மாரமங்கலம் பஞ்சா யத்து கிராம சபை கூட்டங்களில் பல முறை இதற்கு கண்டனம் தெரி வித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்நிலையில், தனியார் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதர வாக செயல்படும் மாவட்ட ஆட்சி யரை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலை மையில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்திரராசன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப் போது அவர் பேசுகையில், மக்க ளின் நலனுக்காக மாவட்ட ஆட்சி யர்கள் செயல்பட வேண்டும். தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் அரசின் முடிவையும், மக்களின் கருத்தையும் கேட்காமல் செயல்பட்டு வருகின்றனர். இது ஆளும் அரசுக்கு அவபெயரையே உண்டாக்கும்.
மேலும், தொழிலா ளர் நல சட்டங்களை அமல்படுத்தா மல், மாவட்ட நிர்வாகங்கள் செயல் படுகின்றன. ஏற்காடு, கொட்டச்சேடு 6 ஆம் நம்பர் சாலை அமைக்க அப் போதைய மாவட்ட நிர்வாகம் ஒப் புக்கொண்ட போதிலும், தற்போ தைய நிர்வாகம் மக்கள் நலனுக்கு பயனில்லாத வகையில் சாலை அமைத்தது சரியான நடவடிக்கை இல்லை. மக்களின் தேவையை அறிந்து மக்களுக்கான நலத்திட் டங்களை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும். ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியர் தனியார் முதலாளிக்கு ஆதரவாக செயல் பட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது. 40 ஆண்டு காலமாக பயன்பாட்டிலுள்ள மண்சாலையை உடனடியாக தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும். இதில் தமி ழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்காவிட் டால், சிஐடியு சார்பில் அடுத்த கட்ட மாக மிகப்பெரிய போராட்டம் நடை பெறும், என எச்சரிக்கை விடுத் தார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், மாவட்ட நிர்வாகி கள் எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி, பி.பன்னீர்செல்வம், வி.இளங்கோ, பி.விஜயலட்சுமி, எஸ்.வசந்தகுமாரி மற்றும் மாரமங் கலம், கொட்டச்சேடு, மோனங்குழி காடு, செந்திட்டு, காளிக்காடு, சுண் டைக்காடு, மலையங்காடு, அரங் கம், சின்னமதூர் பெரிய மதூர், மாவுத்து, குட்டமாத்தி காடு உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் உட்பட 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.