சேலம், ஜூலை 6- சிஐடியு சேலம் மின் திட்ட கிளைத் தலைவர் கருப் பண்ணன் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு சிஐ டியு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் மெய்யனூர் பிரிவில் மின்பாதை ஆய்வாளராகவும், சேலம் மின் திட்டக் கிளைத் தலைவராகவும், சிஐடியு சேலம் மாவட்ட துணைத்தலைவராகவும் கருப்பண்ணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் மின்வாரியத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா சிஐடியு சார்பில் வெள்ளியன்று, வி.பி.சிந்தன் அலுவலகத்தில் நடைபெற்றது. மின்ஊழியர் சங்க ஈரோடு மண்டலச் செயலாளர் சி.ஜோதிமணி தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் வி.இளங்கோ, ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், மாவட்டச் செயலா ளர் ஏ.கோவிந்தன், மின்திட்ட கிளைச் செயலாளர் ரகு பதி, பொது கட்டுமானச் செயலாளர் வெங்கடேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார். முடிவில், கருப்பண் ணன் ஏற்புரையாற்றினார். பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார்.