districts

img

உள்ளாட்சி நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும் சிஐடியு ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக. 7- தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் பத்தாயிரம் வழங்கிட  வேண்டும், உள்ளாட்சி நிர்வாகமே  நேரிடையாக ஊதியம் வழங்கிட  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சேலத்தில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  உள்ளாட்சி, பேரூராட்சி, நக ராட்சி, மாநகராட்சியில் பணி  செய்யும் அனைத்து தொழிலாளர் களுக்கும் முதல் தேதியில் சம்பளம் வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். சட்டப்படியான வார விடு முறை வழங்க வேண்டும். கான்ட் ராக்ட் மற்றும் சுய உதவிக் குழுக் கள் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அரசாணை 152, 139, 10-ஐ  திரும்ப பெற வேண்டும்.  அனைவருக் கும் பென்சன் உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு சாலை போக்குவரத்து சங்கம் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், மாநில குழு உறுப்பினர் அரசு,   பொருளாளர் இளங்கோ,  மாவட்ட நிர்வாகிகள் பி. பன்னீர்செல்வம், சி. மோகன் உள்ளிட்டு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.