districts

சாலை வரி உயர்வை ரத்து செய்க!

கோவை, நவ. 24 - தமிழக அரசின் சாலை வரி உயர்வை ரத்து செய்ய கோரி வெள்ளியன்று சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழக அரசு அண்மையில், வாகனங்க ளுக்கான சாலை வரியையும், புதிய வாக னங்களுக்கான வரியையும் உயர்த்தியது. குறிப்பாக, பழைய சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரியை பல  மடங்கு உயர்த்தியது. மேலும், பழைய மேக்ஸி கேப் வாகனங்களுக்கு காலாண்டு வரியை ஆயுள் வரியாக செலுத்த உத்தர விட்டுள்ளது. ஆன்லைன் அபராத முறையை  கைவிட வேண்டும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர்  கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.ராஜசேகர் தலைமை ஏற்றார். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் சம்மேளன துணைத்தலைவர் எஸ்.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் சி.ஹரி நராயணன், பொருளாளர் ஏ.எஸ்.தாஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி, சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிஐடியு நிர்வாகி கே.ரத்தினகுமார் ஆகியோர் உரையாற்றி னர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர். நாமக்கல்  இதேபோன்று, நாமக்கல் மாவட்ட மோட் டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் முனி யப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித் தார். மேலும், மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ்,  மாவட்ட உதவிச் செயலாளர் ஆனந்தன், சிஐடியு தலைவர் கே.எஸ். வெங்கடாசலம், எலச்சிபாளையம் கிளைத் தலைவர் சேகர்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.