திருப்பூர், ஜூலை 31 - ஊராட்சிகளில் பணி செய்து வரும் ஓஎச்டி ஆப்ரேட்டர், தூய் மைப் பணியாளர்களுக்கு சட்டப் படி கூலி வழங்கக்கோரி புதனன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் திருப் பூர் குமரன் சிலை முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். ஊராட்சிகளில் பணி செய்து வரும் ஓஎச்டி ஆப்ரேட்டர், தூய் மைப் பணியாளர்களை காலமுறை ஊழியராக்க வேண்டும். சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தர வுப்படி அரசாணை 2டி எண்: 62இன் படி ஓஎச்டி ஆப்ரேட்டர்களுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரத்து 593, தூய் மைப் பணியாளர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 593 வழங்க வேண்டும். ஓஎச்டி ஆப்ரேட்டர், தூய்மைப் பணி யாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் காலி பணியிடங்களை நிரப்ப அரசு பிறப் பித்த தடையாணையை ரத்து செய்து, காலி பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும். உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் பி.பழனிசாமி தலை மையில் நடைபெற்ற இந்த பேரணி, திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து துவங்கி மாநகராட்சி அலுவல கத்தில் நிறைவுபெற்றது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், சிஐடியு பனியன் சங்க மாவட் டச் செயலாளர் ஜி.சம்பத் ஆகி யோர் உள்ளாட்சி ஊழியர்களின் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார் இதில், சிஐடியு மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி, துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் பி.ஈஸ்வரன், நிர்வாகிகள் சங்கர், குமார், வையாபுரி, சுப்புலட் சுமி, பரமசிவம், வேல்முருகன், மனோகரன், சி.விஸ்வநாதன், சோபா, எஸ்.புண்ணியமூர்த்தி உள் ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் ளாட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.