districts

img

தனியார்மயமாகும் தூய்மைபணி: சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன.10- தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி தரும புரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் செவ்வா யன்று தருமபுரி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், மக்களின் சுகாதாரத்தை பேணும் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை 152 மற்றும் 132 ஐ  திரும்ப பெற வேண்டும். அர சாணை படி குறைந்தபட்ச ஊதியம்  வழங்கவேண்டும். தொழிலாளி களை பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அதிகாரிகள் மீது  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தை 5  ஆம் தேதிக்குள் தொழிலாளர் களுக்கு வழங்கவேண்டும். நிரந்தர  தொழிலாளியின் பிஎஃப் கணக் கினை வெளிப்படையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முழக்கங்களாக ஆர்ப்பாட் டத்தில் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு, தருமபுரி மாவட்ட இணைச்செயலாளர் கே.எஸ்.பரணிகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் சி.நாகராசன், இணைச் செயலாளர் ஆர்.செல்வம், மாவட்ட நிர்வாகிகள் குட்டியப்பன், சங்கர், ராஜேந்திரன், ராஜா, ஜானகி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட இணைச்செயலாளர் டி.வெங்கட் ராமன் நன்றி கூறினார்.  

ஈரோடு

ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர்  எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், துணைத்தலைவர் என். முருகையா, துணை செயலாளர் கள் வி.பாண்டியன், கே.மாரப்பன், சங்க பொதுச் செயலாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். மாநகராட்சி அலு வலர் சங்க தலைவர் யூனுஸ் வாழ்த்தி பேசினார். இறுதியில் சங்க  துணை செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி. சங்க மாவட்ட  பொருளாளர் கு.சிவராஜ். சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் சு. சுரேஷ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினார்கள்.