நாமக்கல், ஆக 5- பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, முறையான பேருந்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றி யம் பிள்ளைகளத்தூர், வில்லிபா ளையம், சுங்காரம்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பள்ளி மாணவ, மாணவியர், பேருந்து வசதி இல்லாததால், தனி யார் வாகனங்களில், மாதம் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையில் போக்குவரத்திற்கென செலவு செய் கிறார்கள். சாதாரண கூலித் தொழி லாளி குடும்பங்களை சேர்ந்தவர் கள் என்பதால் பெரும் தவிப்புக்குள் ளாகின்றனர். மாதந்தோறும் தனி யார் வாகனங்களுக்கு பணம் கட்ட முடியாத தொழிலாளர்களின் குடும் பங்களை சேர்ந்த குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலையும் உள்ளது. எனவே, மாணவ மாணவியர் நலன் கருதி உரிய பேருந்து வசதி செய்து தர வேண்டும் மற்றும் வில்லி பாளையம் பகுதியில் அமைந் துள்ள அரசு உயர்நிலைப் பள் ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தித்தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு நாமக் கல் மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி தலைமை ஏற்றார். இதில், பூங்கொடி, ஜி.விஜியா, வித்யா, வரதராஜ், ஜோதி உள் ளிட்ட அப்பகுதி மக்கள் திரளா னோர் பங்கேற்றனர்.