திருப்பூர், செப். 19 - இந்திய அரசியல் சட்டம் உறுதிப்ப டுத்தியுள்ள தொழிற்சங்க உரிமைக்காக போராடிவரும் சாம்சங் இந்தியா தொழி லாளர்களுக்கு ஆதரவாக திருப்பூரில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக வியாழக்கிழமை மாலை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமை ஏற்றார். இதில் தொழிற்சங்கம் வைத்த தற்காக சாம்சங் இந்தியா நிறுவனம் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை கைவிட வேண்டும், அரசு தொழிலாளர் துறையும், மாநில அரசும் இப்பிரச்சனை யில் தலையிட்டு சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் சங்கம் சேரும் உரிமையை உறுதிப்படுத்தி பாதுகாக்க வேண்டும், காவல்துறை, அரசு நிர்வாகம் கார்ப்பரேட் நிறுவனத் திற்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்து கொள்வதை கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றோர் எழுப்பினர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் டி.குமார் மற்றும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் உரையாற்றினர். நிறை வாக சாம்சங் இந்தியா தொழிலாளர்க ளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆத ரவு வழங்குவோம் என்று சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் பேசினார். இதில் பல்வேறு சிஐடியு சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.