districts

img

கலைஞர் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகளை அனுமதிக்க மேயரிடம் சிஐடியு மனு

திருப்பூர், டிச. 20 - திருப்பூர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தின் உள்பகுதி யில் தள்ளுவண்டி வியாபாரிகளை அனுமதிக்குமாறு திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவ லகத்தில் மேயர் ந.தினேஷ்குமாரிடம் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி.பாலன் மனு அளித்தார். இம்மனுவில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்பகுதியில் சுமார் 30 ஆண்டு காலமாக பொது மக்களுக்கு மலிவு விலையில் 2க்கு 2  அளவுள்ள தள்ளுவண்டியில் 30 பேர்  கடலை, பொரி வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் மாலை 5  மணி முதல் 9 மணி வரை பழைய  பேருந்து நிலையத்திற்குள் பேருந் திற்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாமல் தள்ளுவண்டியில் வியா பாரம் செய்து வருகிறார்கள். மத்திய  அரசின் சாலையோர வியாபாரம் செய்பவர்களுக்கான தேசிய கொள் கைப்படி  மாநகராட்சி நிர்வாகம் அவர் களுக்கு அடையாள அட்டை வழங்கி  உள்ளது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பழைய பேருந்து  நிலையத்தை இடித்து புதுப்பித்து கட் டும் பணி தொடங்கியதால் தற்காலிக  பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட இடங்களில் அவர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள்.

தற்போது கலை ஞர் பேருந்து நிலையம் திறக்கப் பட்டு, பேருந்துகளும் வந்து செல்கின் றன. பல ஆயிரக்கணக்கான சாதா ரண, ஏழை, எளிய மக்கள் வந்து செல் லும் இடமாகவும், குறைந்த விலை யில் பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பாகவும் உள்ளது. எனவே கலைஞர் பேருந்து நிலையம் உள்ளே  போக்குவரத்திற்கும், பொது மக்க ளுக்கும் இடையூறு இல்லாமல் வியா பாரம் செய்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு அனுமதி அளிக் குமாறு சிஐடியு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேயரிடம் மனு அளித்த நிகழ் வில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ரங் கராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெயபால் மற் றும் சாலையோர வியாபாரிகள் திர ளானோர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கை குறித்து பரிசீ லிப்பதாக மேயர் ந.தினேஷ்குமார் தெரிவித்தார்.