districts

img

போனஸ் கேட்டு சிஐடியு-வினர் ஆர்ப்பாட்டம்

உதகை, நவ.7- நகராட்சி மற்றும் உள் ளாட்சித்துறை ஒப்பந்த  ஊழி யர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்கு வதாக உதகை நகராட்சி நிர் வாகம் உத்தரவாதம் அளித் துள்ளது. நகராட்சி மற்றும் உள் ளாட்சித்துறை ஒப்பந்த  ஊழி யர்களுக்கு சம்பளம் மற்றும்  தீபாவளி முன்பணம் உடனடி யாக தரக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் போராட்டம் நடை பெற்றது. அதன் எதிரொலி யாக, ஒப்பந்ததாரரின் பிரதி நிதியை அழைத்து இப் பிரச்சனை தொடர்பாக பேசப் பட்டது. இதில் நவ.8 ஆம் தேதிக்குள் (இன்று) சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர்.  மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடர் வோம் என சிஐடியு சார்பில் எச்சரிக்கப்பட் டுள்ளது. இதில் சிஐடியு மாவட்டத் தலை வர் எல்.சங்கரலிங்கம், மாவட்டச் செயலா ளர் சி.வினோத், மாவட்டப் பொருளாளர் ஏ. நவீன் சந்திரன், நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் சி. சேகர், பொருளாளர் ரவி உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  ஆட்சியர் அலுவலகம் உற்பத்தியை துவக்க வேண்டும். முழு  ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச  போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லிங் பயோ டெக் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப் பாட்டம் நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் தலை வர் ஆப்ரஹாம், செயலாளர் யு.மூர்த்தி, கௌரவத் தலைவர் கே.ராஜேந்திரன், தோட்ட சங்கத் தலைவர் சுந்தரம், நகராட்சி மற் றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க  செயலாளர் சி.சேகர் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.