districts

img

வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவிற்கு சிஐடியு எதிர்ப்பு

ஈரோடு, ஜூலை 5- தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க முயலும் ஈரோடு வருவாய் கோட் டாட்சியரின் உத்தரவிற்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளன. ஈரோடு மாவட்டம், விவசாயம் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நகரமாகும். அதற் கான சரக்கு போக்குவரத்துகளைக் கையாள மாநகரைச் சுற்றிலும் 250க்கும் மேற்பட்ட லாரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இங்கிருந்து நாட்டின் பிற மாநிலங் களுக்குச் சரக்குகளை கொண்டு சேர்க்கப் படுகிறது. மாநிலத்திற்குள் சரக்கு போக்கு வரத்துகளைக் கையாள ரெகுலர் லாரி சர் வீஸ் என்ற பெயரில் நிறுவனங்கள் செயல்படு கின்றன. இவை தவிர மாநகரத்திற்குள் மாட்டு  வண்டிகளும் பயன்பாட்டில் உள்ளன. இவ் வாறு லாரி நிறுவனங்கள், ரெகுலர் சர்வீஸ், இலகு ரக வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டி கள் மூலம் சரக்கு போக்குவரத்து கையா ளப்படுகிறது. 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ள னர். லாரி நிறுவனங்கள், கடைகள், கடை வீதி கள், சந்தைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றினாலும் தொழி லாளர்களுக்குள் வேலை தொடர்பான பிரச்ச னைகள் ஏற்படுவதில்லை. காரணம் அத்த கைய கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படு கின்றன. இந்நிலையில், வருவாய் கோட்டாட்சிய ரின் சமீபத்திய உத்தரவு இதில் பிரச்சனை ஏற்படும் வகையில் உள்ளதாக சுமைப்பணி தொழிலாளர்கள் குமுறுகின்றனர். கோட் டாட்சியரின் உத்தரவு குறித்து, சிஐடியு உள் ளிட்ட தொழிற்சங்கங்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் முறையிட்டுள்ளனர். அதில், சுமைப் பணி தொழிலாளர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றினாலும் அவரவர் வேலை அவர வர்க்கே என்ற அடிப்படையில் அமைதியான முறையில் பணியாற்றி வருகின்றனர். மற்ற வர் வேலைகளில் குறுக்கிடுவதில்லை. இது  நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறை யாகும். 36 வருடங்களுக்கு முன்பு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் முன்னி லையில் தொழிற்சங்கங்கிடையில் இந்த  ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி  உழைப்பிற்கேற்ப அவரவர் கூலி பெறுகின்ற னர். இந்நிலையில், ஈரோடு வருவாய் கோட் டாட்சியர், மாட்டு வண்டி பயன்பாட்டை தடை  செய்வதென மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மாட்டு வண்டிக்கு பதிலாக இலகு ரக வாக னங்களைப் பயன்படுத்தலாம். சரக்குகளை  ஏற்றி இறக்கும் வேலையையும் அவர்களே செய்யலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் கூலி பெறுகிறார்கள் என வும் தெரிவித்துள்ளார். வருவாய் கோட்டாட் சியரின் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந் தால், மாட்டு வண்டி வேலை மட்டுமின்றி பல் வேறு வேலைகள் சம்பந்தமாக உருவாக்கப் பட்ட கட்டுப்பாடுமிக்க நடைமுறைகள் தகர்க் கப்படும். தொழிலாளர்களின் வேலையும், வாழ் வாதாரமும் கேள்விக்குறியாகும். இந்த உத்த ரவை அமல்படுத்துவதால் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு நடைமுறை கள், தொழில் அமைதியைப் பாதுகாப்பது இயலாத செயலாகும். எனவே, எங்கள் கோரிக்கையை ஏற்று வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து செய்யுமாறு அதில் தெரிவித்துள்ள னர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார், பிரபு, ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத் திய சங்க நிர்வாகி விஜயகுமார், பொதுத் தொழிலாளர் மத்திய சங்க நிர்வாகி பொ.வை. ஆறுமுகம், தொமுச மாநில அரங்க செயலா ளர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் ரவிசந்திரன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.