திருப்பூர், அக். 11 – திருப்பூர்-அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் அருகே சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கப் பெயர்ப்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. சிஐடியு சங்கக் கொடியை மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஏற்றி வைத்தார். பெயர்ப்பல கையை மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு திறந்து வைத்தார். மோட்டார் தொழிலாளர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்ட னர். முடிவில் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.அருண் நன்றி கூறினார். மாநாடு கொடியேற்றம் சிஐடியு மாநில மாநாட்டை முன்னிட்டு அவிநாசி சாலை மாவட்ட சிஐடியு தலைமை அலுவலகம் முன்பாக செவ்வா யன்று சங்கக் கொடியேற்றப்பட்டது. சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் ஜி.சம்பத் செங்கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.