districts

img

வயநாடு மக்களுக்கு உதவி செய்ய புறப்பட்ட சிஐடியுவினர்!

மேட்டுப்பாளையம், ஜூலை 31- நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதி மக்களுக்கு உதவி செய்ய, மேட்டுப்பாளையத்தில் இருந்து சிஐடியுவினர் செவ்வாயன்று இரவு புறப்பட்டுச் சென்றனர். கேரளம் மாநிலம், வயநாட்டில் செவ் வாயன்று அதிகாலை ஏற்பட்ட பெரும்  நிலச்சரிவால், தற்போது வரை 230க்கும்  மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள் ளனர். மேலும், 300க்கும் மேற்பட்ட குடும் பத்தினரின் நிலை என்வென்று தெரிய வில்லை? மீட்புப்பணிகளில் ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், நிலச்சரி வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி  செய்ய, கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சிஐடியு பொதுத்தொழிலா ளர் சங்கத்தின் நிர்வாகி சம்சுதீன்  தலைமையில் பலர் செவ்வாயன்று  இரவு வயநாடு புறப்பட்டனர். இந்த குழு வில் முகமது அலி ஜின்னா, இன்பா,  சன்ஃபீர், சுப்பு உள்ளிட்டோர், ‘நிழல்  அவசர ஊர்தி’யில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உதவி செய்ய மற்றும்  நேரடி  களப்பணிக்காக புறப்பட்டனர்.  சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் வழியனுப்பி வைத்த னர்.