மேட்டுப்பாளையம், நவ.20- மேட்டுப்பாளையம் பவானி ஆற் றுப்பாலம் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்க ளின் பாதுகாப்பு கருதி உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்திள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மேட் டுப்பாளையம் பொதுத்தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரத் தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே 1984 ஆம் ஆண்டு கான்கிரீட் பாலம் கட்டப் பட்டது. தமிழகம் மற்றும் இந்தியா வில் உள்ள பிற மாநில மக்கள் சுற் றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைக ளுக்காக நீலகிரி மாவட்டத்திற்கு செல்வதற்கு இந்தப் பாலம் தான் பிரதான வழியாகவும் இணைப்பு பாலமாகவும் உள்ளது. இந்த பாலத் தின் மீது தான் தினசரி ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகிறது. சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலம் தற்போது கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்து வெறும் கம்பிகளுடன் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தப் பாலத்தின் நடைமேடை மிகவும் பழு தடைந்து பள்ளமேடுகளாகவும் ஆங் காங்கே உடைந்தும் உள்ளது. மழைக் காலங்களில் பாலத்தில் இருந்து மழைநீர் வெளியில் செல்ல முடியா மல் பாலம் முழுவதும் சேறும், சகதி யுமாக காட்சியளிக்கிறது. அதேபோல் சிறு கனரக வாகனங் கள் சென்றாலும் பாலம் தூரிப்பாலம் போல் ஊசலாட்டம் ஏற்படுகிறது. இது பாலத்தை பயன்படுத்தும் பொதுமக் கள் வாகன ஓட்டிகள் இடையே அச் சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த பவானி ஆற்றுப்பாலத்தின் தன் மையை தொழில்நுட்ப வல்லுனர்க ளைக் கொண்டு ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, மிகவும் பழுதடைந்து அபாயகரமாக காட்சியளிக்கும் பவானி ஆற்றுப்பாலத்தை பொதுமக் களின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீர மைக்க வேண்டும், என தெரிவிக்கப் பட்டுள்ளது.