திருப்பூர், ஜன.2– மோடி அரசு பின்பற்றும் அதே தொழிலா ளர் விரோதப் பாதையில் தமிழக அரசும் பய ணிக்கிறதா என்று கேள்வி எழுப்பி சிஐடியு முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள முறைசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக திங்களன்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், தமிழக கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினருமான டி.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கடந்த ஆண்டு வழங்கியது போல பொங்கல் தொகுப்பு வழங்க வேண் டும், விசாரணை என்ற பெயரில் பென்சன் பெரும் தொழிலாளர் வயிற்றில் அடிக்கக் கூடாது, வீடு வழங்கும் திட்டத்தை எளிமை யாக்க வேண்டும், பென்சன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயது அடைந் தவுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஜி.சம்பத், சாலை யோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி. பாலன், மோட்டார் சங்கச் செயலாளர் ஒய். அன்பு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்டு மான சங்கப் பொருளாளர் பி.ரமேஷ், தாராபு ரம் பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் பி. பொன்னுசாமி உள்பட முறைசாரா தொழிலா ளர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராஜன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து சிஐடியு நிர்வாகிகள் நல வாரிய அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி மனு அளித்தனர்.