districts

img

இபிஎப் தொகையை உயர்த்தி வழங்கிடுக சிஐடியு ஹோட்டல் சங்கப் பேரவை வலியுறுத்தல்

கோவை, ஜூலை 30- இபிஎப் தொகையை குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியம் ரூ.9  ஆயிரமாக உயர்த்திட வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட லாட்ஜ் அன்டு ஹோட்டல், பேக்கரி தொழிலாளர் சங்கத்தின் பேரவை வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் 14 ஆவது ஆண்டு பேரவை செவ்வாயன்று கோவை சிவானந்தா காலனி யில் உள்ள கேரளா சமாஜம் அரங்கில் மாவட் டத் தலைவர் கே.மனோகரன் தலைமையில்  நடைபெற்றது. ஆர்.செந்தாமரை வரவேற் றார், கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினர் பிஆர்.நடராஜன் பேரவையை துவக்கி வைத்து உரையராற்றினார். சங்கத்தின் ஆண் டறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை சங்க பொதுச் செயலாளர் கே.சந்தோஷ், பொருளாளர் பி.தங்கராஜ் ஆகியோர் முன் வைத்தனர். இதில், சிஐடியு நிர்வாகிகள், ஆர். ராஜன், கே.ரத்தினகுமார் ஆகியோர் வாழ்த்தி  உரையாற்றினர்.  இதனைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.மனோகரன், பொதுச்செயலாளராக கே.சந்தோஷ், பொரு ளாளராக ஆர்.செந்தாமரை உள்ளிட்ட 27 பேர்  கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட னர். முடிவில், கே.ராமலிங்கம் நன்றி கூறி னார். இதில், திராளனோர் பங்கேற்றனர்.