திருப்பூர், ஏப்.12 - ஓய்வூதியம் உள்ளிட்ட சட்டப் படியான உரிமைகளை வழங்க வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு சுமை பணி தொழிலாளர்கள் புத னன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் ்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பாக சிஐடியு திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வாழ்க்கை உத்தரவாதமும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடை யாள அட்டை வழங்கி, அவர்களின் வேலையை பாதுகாக்க வேண்டும். ஈஎஸ்ஐ, பி.எப். சட் டத்தை அமலாக்க வேண்டும். 60 வயதை தாண்டிய சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடற்ற சுமைப்பணி தொழிலாளர் களுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் கே.உண்ணி கிருஷ்ணன், ரயில்வே குட்ஷெட் சுமைப்பணி சங்க நிர்வாகி பழனி சாமி, சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.