சேலம், ஆக.16- கைத்தறி துணிகள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என சிஐடியு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. சேலம் வி.பி.சிந்தன் நினைவகத் தில் தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழி லாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் இ.முத்துக்குமார் தலைமை வகித் தார். இக்கூட்டத்தில், கைத்தறி துணி கள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலு மாக நீக்க வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை கறாராக அமல்ப டுத்த வேண்டும். நெசவாளர்களின் பென்சன் தொகையை ரூ.5 ஆயிர மாக உயர்த்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கைத்தறி பட்டு நூலின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடத்தில் ஒரு மாதம் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். குவியலாக பணி யாற்றும் கைத்தறிக்கூடங்களில் வருங் கால வைப்பு நிதி பிடித்தம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் என்.பி.நாகேந்திரன், பொருளாளர் ஜீவா, சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.சண்முகம், தலை வர் எஸ்.அன்பழகன், பொருளாளர் ஆர்.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.