districts

img

தற்காலிகப் பணியாளர்களின் உழைப்பை சுரண்டுவதா?

கோவை, ஜூலை 12- குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்கா லிகத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டு வதை கண்டித்து, தீர்க்கப்படாத கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் சிஐடியு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்த தாரர் ஆண்டுதோறும் வாரியத்திடம் இருந்து  ஊதிய உயர்வை பெற்றுவிடுகிறார். ஆனால், பணியாளர்களுக்கு வழங்காமல், தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு 8 மணி நேர  ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. தொழி லாளி செலுத்த வேண்டிய பங்கு ஊதியத்தில் 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது. நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்கு 13 சத விகிதம் கொடுத்துவிடுகிறது. இரண்டையும் சேர்த்து ரூ.2854ஐ இபிஎப் கணக்கில் செலுத்த வேண்டியதிற்கு பதிலாக ரூ.1672 மட்டுமே  செலுத்தப்படுகிறது. இஎஸ்ஐக்காக 198  ரூபாய் செலுத்த வேண்டியதற்கு பதிலாக  வெறும் ரூ.100 மட்டுமே செலுத்தப்படுகி றது. பில்லூர் பராமரிப்பு கோட்டத்தில் பணி யாற்றும் பராமரிப்பு உதவியாளர்களுக்கு சிறப்பு நிலை நிலுவையை பல மாதங்களாக காலதாமதப்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது, குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு 6 மாதங்கள் தாமதமாக வழங்கப்படுகிறது. மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள  குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சரவ ணன் தலைமை ஏற்றார். இதில் இணைச்செய லாளர்கள் சசிகுமார், ஃபெலிக்ஸ், உதவித் தலைவர் சக்திவேல், துணைச் செயலாளர் ரமேஷ் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.