districts

img

கொள்முதல் பணியை தனியாருக்கு விடுவதா?

திருப்பூர், நவ. 19 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தில் கொள்முதல் பணியை தேசிய கூட்டுறவு  நுகர்வோர் கூட்டமைப்பின் (என்சிசிஎப்) கீழ்  தனியார் கொள்கைக்கு மாற்றுவதால் தொழி லாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகப் பொதுத் தொழிலாளர் சிஐடியு சங் கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொள்முதல் பணியாளர்களின் பணி நிரந் தரம், பதவி உயர்வு போன்றவை கேள்விக்கு றியாகிறது. எனவே தனியார்மயத்தைக் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொது விநியோக முறை யில் உள்ள குறைகளைக் களைந்து, அதை  பலப்படுத்த வேண்டும், நிரந்தரப் பணியி டத்தை வெட்டிச் சுருக்கக் கூடாது ஆகிய  கோரிக்கைகளையும் வலியுறுத்தி திருப்பூ ரில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு செவ்வாயன்று மண்ட லச் செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், நுகர்பொ ருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலா ளர் சங்க மாநிலப் பொருளாளர் எம்.ஏழு மலை, கூட்டுறவு பணியாளர் சங்கத் தலைவர்  பி.கௌதமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சிஐடியு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எஸ். பரமேஸ்வரன், எம்.செல்வநாதன், எஸ்.கோபாலகிருஷ்ணன், எம்.பாஸ்கரன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவாக கே. செந்தில்குமார் நன்றி கூறினார்.