districts

img

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரி கூலி நிர்ணயம் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 5- தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் குடோன்களில் மதுபான பாட்டில் களை வாகனங்களில் ஏற்றும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு பெட்டி ஒன்றுக்கு ரூ.3.50 வீதம் ஒரே மாதிரி கூலி நிர்ணயம் செய்ய வலியுறுத்தி திருப்பூர், காங்கேயத்தில் சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் அமைந்துள்ள டாஸ் மாக் குடோனில் டாஸ்மாக் மேலா ளர் அலுவலகம் முன்பாக வியாழ னன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்க நிர்வாகக்குழு உறுப்பி னர் பிரபாகரன் தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், சங்கச் செயலாளர் கே.உண்ணிகிருஷ் ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். ஒரே மாதிரி கூலி நிர்ணயம் செய்வதுடன், ஏற்றுக் கூலியை மாதக்கணக்கில் பாக்கி வைக்காமல் தினசரி வழங்க வேண்டும். அனைத்து குடோன்களிலும் மதுபான பாட்டில் களை ஏற்றி, இறக்க டிராலி தள்ளு வண்டி வழங்க வேண்டும். டிரான்ஸ் போர்ட் காண்ட்ராக்ட்டர்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற டாஸ் மாக் நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் டாஸ்மாக் சுமைப்பணியில் ஈடுபடும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழு மையாக கலந்து கொண்டனர்.

காங்கேயம்

காங்கேயத்தில் உள்ள டாஸ் மாக் குடோன் முன்பாக வியாழ னன்று நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காங்கேயம் டாஸ் மாக் சுமைப்பணி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் பி.பொன் னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார் பில் கே.திருவேங்கடசாமி, தங்க வேல் ஆகியோர் பங்கேற்று கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றி னர்.