districts

img

பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க சிஐடியு கூட்டுறவு பணியாளர் சங்க மாநாடு கோரிக்கை

திருப்பூர், ஆக.25- பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண் டும் என, திருப்பூர் மாவட்ட கூட்டுற வுப் பணியாளர் சங்க (சிஐடியு) மாநாடு கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவுப் பணி யாளர் சங்க (சிஐடியு) மாவட்ட மாநாடு ஞாயிறன்று சிஐடியு மாவட்ட  அலுவலகத்தில், மாவட்டத் தலைவர்  பி.கௌதமன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் துவக்கவுரை யாற்றினார். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் ஜி.சம்பத் வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், பொது விநி யோகத் திட்டத்தை தனித்துறை யாக தமிழக அரசு அறிவிக்க வேண் டும். அனைத்து நியாய விலைக்கடை களுக்கும் ரேசன் பொருட்கள் முழு  ஒதுக்கீடு செய்வதுடன், வெளி  மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க ஏதுவாக 10 சத விகிதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய  வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகை முறையாக கணக்கில் செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப்  பணியாளர்களுக்கு அறிவித்த ஊதிய விகிதத்தில் உள்ள குறைபாடு களை களைய வேண்டும். திருப்பூர் வளர்மதி மற்றும் பல்லடம் வட்டாரத் தில் தேவையற்றப் பொருட்களை கட்டாயப்படுத்தி இறக்கக்கூடாது. தேவையான பொருட்களை தேவைப்பட்டியல் பெற்று வழங்க வேண்டும். துவரம் பருப்பு, பாமா யில் கால தாமதமின்றி அந்தந்த மாதத் திற்கு முழு ஒதுக்கீடு செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலை வராக பி.கௌதமன், செயலாளராக கே.மகேந்திரன், பொருளாளராக பி. சுரேஷ், துணைத்தலைவர்களாக சர வணமூர்த்தி, கார்த்திகேயன், கருப்பு சாமி, துணைச்செயலாளர்களாக முருகன், சிவக்குமார், பிரபாகரன்  மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்க ளாக 11 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். முடிவில், தமிழ்நாடு கூட்டுறவு  ஊழியர் சம்மேளனத் தலைவர்  கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை நிறைவு  செய்து வைத்துப் பேசினார். கூட்டு றவு பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் பி.முரு கன் நன்றி கூறினார்.