districts

img

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 10- மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவ டிக்கைகளை எதிர்த்து சிஐடியு சார்பில் புத னன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்  மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சித்ரா தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய பணமாக்கும்  திட்டத்தை கைவிட வேண்டும். தனியார்மய மாக்கும் அனைத்து வடிவங்களுக்கும் முற் றுப்புள்ளி வைத்திட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய மாக ரூ.28000 வழங்க வேண்டும். ஒப்பந்ததா ரர்கள் மாறி சென்றாலும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு பணி பாதுகாப்பை உத்தரவாதப் படுத்த வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர பணப் பயன்களை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அக்னிவீர், ஆயுத்வீர், கொயனாவீர் போன்ற குறிப்பிட்ட கால  வேலை வாய்ப்பு திட்டங்கள் அனைத்தையும்  கைவிட வேண்டும். ஊழியர் வைப்பு நிதி  மற்றும் ஓய்வூதிய நிதி உள்ளிட்ட வைகளுக்கு முதலாளிகள் தொகையை செலுத்தாவிட்டால் கட்ட வேண்டிய அபராத  விகிதத்தை குறைத்து அறிவிப்பை வெளி யிட்டு இருப்பது ரத்து செய்ய வேண்டும்.  புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண் டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். ஊழியர்கள் பிரா விடண்ட் திட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9000 அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழி யர்கள் உள்ளிட்ட அனைத்து திட்ட ஊழியர் கள் அனைவரையும் நிரந்தர ஊழியர்கள் ஆக்கிட வேண்டும். அனைவருக்கும் குறைந் தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உட்பட சமூக பாதுகாப்பு பயன்பாடுகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்  சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்ரா, மாவட்ட துணைத் தலைவர் சித்ராதேவி, மாநில நிர் வாகி எ.அனிதா, மாநில செயற்குழு உறுப்பி னர் கே.கஸ்தூரி, மின்வாரிய சங்கத் தலைவர்  ராமலிங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலை வர் ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற் றினர். இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி. முத்துச்சாமி, பி.பாலன், ஒய்.அன்பு, சுப்ரம ணியம் உள்ளிட்ட உள்ளாட்சி, போக்குவ ரத்து, லிகாய், டாஸ்மாக், நுகர்பொருள், மின் வாரிய ஊழியர்கள், என்எச்எம் மருத்துவ ஊழியர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அங் கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.