தருமபுரி, ஜூலை 19- மின்வாரியம் தனியார்மயமானால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பிரச்சார இயக்கம் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மின்வாரியம் தனியார் மயமானால், தமிழ்நாடு அரசின் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை பறிபோகும். தனி யார்மயத்தால் மின் கட்டணம் பல மடங்கு உயரும். பல தனியார் நிறுவனங்களிடம் மின்சாரத்தை நுகர்வோர் பெறுவ தால் மானியம் கேள்விக்குறியாகும். மேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரமும், கைத்தறி நெசவுத் தொழிலுக்கு மானிய மின்சாரமும், வீட்டு மின் இணைப்பிற்கு வழங்கும் 100 யூனிட் மின்சாரமும் கேள்விக் குறியாகும். மின்துறையை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவேண்டும் என பிரச்சாரத்தில் வலியு றுத்தினர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் தலைமை ஏற்றார். மாநிலத் துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டப் பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை களை விளக்கி பேசினர்.