ஈரோடு, ஜூன் 5- சொந்த வீடில்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் 23 ஆவது ஆண்டு மகா சபை ஞாயிறன்று ஈரோட்டில் நடைபெற்றது. சங்கத் தின் தலைவர் ஆர்.மோகனசுந்த ரம் தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து ஆட்டோ சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி பேசினார். சிஐடியு மாவட்ட தலை வர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.பாரதி, ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் பி.கனகராஜ் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் கே.மாரப் பன் நிறைவுரையாற்றினார். மேலும், சொந்த வீடில்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரி யம் மூலம் முன்னுரிமை அடிப்ப டையில் வீடு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும். பொதுப் போக்குவரத்திற்கு வலு சேர்க்கும் ஆட்டோ தொழிலை பாதுகாக்கும் வகை யில் மானிய விலையில் எரி பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக சி.வடிவேல், பொதுச் செயலாளராக எஸ்.ஷேக் தாவூத், பொருளாளராக கே.ஸ்ரீதர், துணைத் தலைவர்களாக என். வேணுகோபால், எம்.அயூப்கான், பி.ராஜன், துணைச் செயலாளர்க ளாக சி.செந்தில், அகமது பாஷா, என்.ஜீலானி மற்றும் 10 கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக என்.ஜிலானி நன்றி கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் பள்ளிபாளை யம் கிளையின் மகாசபை கூட்டம், தலைவர் ஆறுமுகம் தலைமை யில் பள்ளிபாளையம் ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்றது. வேலை அறிக்கையை கிளைச் செயலாளர் எஸ். முருகன், வரவு செலவு அறிக்கையை பொருளா ளர் ஜெயராமன் ஆகியோர் முன் வைத்து பேசினர். அதன் பிறகு கிளை தலைவராக ஆறுமுகம், செயலாளராக சங்கர், பொருளா ளராக ஜெயராமன், துணைத் தலைவராக வாசு, துணைச் செய லாளராக தண்டபாணி, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக லோகேஷ், எஸ். முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் தண்டபாணி கலந்து கொண்டார், சிஐடி சங்கத் தின் மாவட்ட உதவி செயலாளர் கே.மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மத்திய அரசின் டீசல் விலை பெட்ரோல் விலை உயர்வுக்கு எதி ராகவும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் போராட் டம் நடத்துவது எனவும், வரு கிற 10ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் ஆட்டோ சம்மே ளனத்தின் மாநில மாநாட்டில் தோழர்கள் அனைவரும் பங்கேற் பது எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.