districts

img

பன்னாட்டு முதலாளிகளுக்கு அதிகார வர்க்கம் ஆதரவா?

திருப்பூர், அக்.4 - இந்திய நாட்டுச் சட்டங்களை மதிக் காமல் அன்னிய முதலாளிகளுக்கு ஆத ரவாகவும், தொழிலாளர்களுக்கு எதி ராகவும் செயல்படும் காஞ்சிபுரம் ஆட் சியரை கண்டித்து திருப்பூரில் சிஐடியு வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத் தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நடந்த மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், நம் ஆட்கள் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் சம்பளம், வாரத்தில் இரு  நாள் விடுமுறை என அதிகப்படியான சம் பளம் கேட்கிறார்கள், வடநாட்டவர்கள்  ரூ.9ஆயிரம் சம்பளம் இருந்தால்போ தும் என பணிபுரிவதாக தொழிற்சாலை கள் தரப்பில் கூறுகிறார்கள். ரூ. 15 ஆயி ரம் கொடுத்தால்கூட நம்மூர்காரர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை  என்று முழுக்க, முழுக்க தொழிலாளர்க ளுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். மேலும், தொழிற்சாலைகளில் வேலை நேர சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், குறைந்தபட்ச கூலி சட்டம்,  காண்ட்ராக்ட் ஒழிப்பு மற்றும் ஒழுங்குப டுத்துதல் சட்டம் போன்ற எந்த சட்டமும்  முறையாக அமல்படுத்துவதில்லை. வடநாட்டவர், உள்ளூர்காரர் என்ற முறையில் பாகுபடுத்திப் பேசுவதும், குறைவான கூலி பெற்றுக் கொண்டால் தான் வேலை கிடைக்கும் என்று அரசி யல் சட்டத்திற்கு விரோதமானதாக பேசி யதை கண்டித்து சிஐடியு மாநில நிர்வாக  குழு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கண்டன இயக்கத்திற்கு  அழைப்பு விடுத்தது. அதன்படி புதனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சம் மேளன மாநிலத்தலைவர் பி.முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக்குழு துணைத் தலைவர் எல்லமாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்,  துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். மாவட்ட நிர்வாகிகள் ஒய். அன்பு,  பி.பாலன், செல்லதுரை, சுப்பிரமணி  உட்பட திரளானோர் மேற்பட் டோர் பங்கேற்றனர்.