உடுமலை, மார்ச் 23- உடுமலை அரசு போக்குவரத்து கழக சொத்துகள் படிப்படியாக களவா டப்படுகிறதென, துணை காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் சிஐடியு, எல்பிஎப் நிர்வாகிகள் புகாரளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், உடுமலை, திரு மூர்த்தி அணை அருகில் சேரன் கழ கம் பயிற்சி நிறுவனம் அமைக்க வாங் கிய 20 ஏக்கர் நிலத்தில், தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு என்று ஒன்றிய அரசு 10 ஏக்கர் எடுத்து கொண்டது. மீதி நிலம் பராமரிப்பு இல்லாமல் இருந்த தால், அருகிலிருந்த ஒரு நிலக்கிழார் விவசாயம் செய்து கொண்டிருந்தார். இதை கண்டுபிடித்து ஊடகங்கள் மூலம் செய்தி வந்ததன் பின்ணணியில் மேற் படி 10 ஏக்கர் நிலம் வேலி போடப் பட்டுள்ளது. தற்சமயம் உடுமலை கூண்டு கட்டுமான பிரிவாக செயல்பட்டு வந்த நிறுவனத்தில், ஒப்பந்த அடிப் படையில் பணியாளர்களை அமர்த்தி பணி நடைபெற்று வந்தது. மாறி மாறி வந்த அதிகாரிகள், அதிமுக ஆட்சியா ளர்கள் கூண்டு கட்டுமான பிரிவை சில மாத காலம் மூடிவிட்டனர். தொடர்ந்து பல இடங்களில் சிஐடியு முறையீடு செய் ததின் விளைவாக மீண்டும் புதுபிக்கும் பிரிவாக இயங்க தொடங்கியது. தற்சம யம் ஆட்பற்றாகுறை காரணமாக உடு மலை எப்சி யூனிட் பணியாளர் 20 பேரை கூண்டோடு ஒரே நாளில் தாராபுரத் திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதன் விளைவாக ஆளில்லாத கம்பெனியின் சுவற்றை, தனியார் நிறு வனத்தினர் இடித்துபொருட்களை திரு டிச்சென்றுள்ளனர். போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளின் அக்கறை யற்ற போக்கால் பல கோடி ரூபாய் சொத்து கபளீகரமாகிறது. எனவே, போக்குவரத்து கழக சொத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், என அதில் வலியுறுத்தப்பட்டுள் ளது.