நாமக்கல், ஆக.29- பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி ஆர்எஸ் உள்ளிட்ட மக்கள் குடியிருப்பு பகுதியில் இர வில் திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித் ததால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இப்பகுதி மக்கள் தவித்த னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம், காவேரி ஆர்.எஸ், கும ரப்பா நகர் பகுதியில் 500க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். மேலும் 200க்கும் மேற் பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் மின் உபயோகத்திற்காக 30 வருடங்க ளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர், தற்போது முழுவ தும் பழுதடைந்த நிலையில் உள்ள தாகவும், இதுதொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட அரசு அலுவ லர்களுக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. கடந்த மூன்று மாத காலமாக டிரான்ஸ்பார் மரில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மின் தடைபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. மின்தடை ஏற்படும் போதெல்லாம் இப்பகுதி யில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் இயக்க முடியாமல் தொழிலாளர் கள் பெரிதும் சிரமமடைந்து வரு கின்றனர். மேலும், பள்ளி குழந்தை கள், பொதுமக்கள் வெகுவாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். இந்நிலை யில், புதனன்று மாலை டிரான்ஸ் ்பார்மர் வெடித்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாரமின்றி, பொதுமக்கள் மெழுகு வத்தியுடன் வீட்டு வாசலுக்கு வந்த னர். தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்திற்கு தயாரான நிலை யில், இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்க வந்த பள்ளிபாளை யம் காவல் துறையினர் பொதுமக்க ளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண் டனர். அப்போது, கடந்த மூன்று மாத காலமாக இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படுவ தால், அடிக்கடி மின்சாரம் துண்டிக் கப்படுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் படிக்க முடி யாத சூழ்நிலை ஏற்படுவதும், வய தான முதியவர்கள் மின்சாரம் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு தள்ளப் படுவதாகக்கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதுதொடர்பாக மின்சார துறை அதிகாரிகளை சந்தித்து, உடனடி தீர்வு காண உதவுவதாக போலீசார் அளித்த உறுதியின்பே ரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.