திருப்பூர், செப்.24- 4 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகக் கூறி, எல்லம்பாளையம் பகுதி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் காலிக்குடங்களை தலையில் வைத்து, குடிநீர் தேவையைப் போக்க வேண்டும் என கோரிக்கை வைத்த னர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அங்கு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்தி ருந்தனர். திடீரென அலுவலக வளாகத் தில் காலிக்குடங்களை தலையில் வைத்து குடிநீர் தேவையை உடனடி யாக போக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், காங்கேயம் தாலுகா, குண்டடம் ஒன்றியம், எல்லம்பாளையம் புதூர் ஏடி காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு இரண்டு ஆழ்குழாய் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் உள்ளன. இதில், கடந்த நான்கு மாதமாக தண்ணீர் வரவில்லை. மேற்படி அதிகாரியிடம் புகார் அளித்தும் யாரும் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஊராட்சி நிர்வா கத்தினர் 15 நாட்களுக்கு ஒரு முறை லாரியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
ஒரு வீட்டுக்கு நான்கு குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கக்கூடிய தண் ணீரை பயன்படுத்தினால் குழந்தைக ளுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீரின்றி தவித்து வரும் எங்கள் பகுதி மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறினர். இந்த குறைதீர் கூட்டத்தில் பழ னிச்சாமி என்பவர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாக, குடிமங்கலம் ஒன்றிய பகு தியில் குடியிருந்து வருகிறேன். கடந்த செப்.20 ஆம் தேதி வெள்ளியம்பாளை யம் ஊரை சேர்ந்த மயில்சாமி என்பவ ரின் காட்டிற்கு கூலி வேலைக்கு சென் றேன். அப்போது பக்கத்து காட்டில் நின்று கொண்டிருந்த அருள்ஜோதி என் பவர் என்னை நோக்கி வேகமாக வந்து, என் கையில் இருந்த மண் வெட்டியை பிடுங்கி வீசிவிட்டு, என் சாதியை குறிப் பிட்டு வாயில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தையால் திட்டி கீழே கிடந்த கட் டையை எடுத்து கொலை மிரட்டல் விடுத் தார். இது தொடர்பாக அவர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத் தேன். இருப்பினும் அவர் மீது நடவ டிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உடுமலைப்பேட்டை துணை கண்கா ணிப்பாளரிடம் புகார் அளித்தேன். அவர் எனது புகாரை ஏற்றுக் கொள்ள முடி யாது என்றும், நீங்கள் முதலமைச்சர் கிட்டயே சொன்னாலும் நான் பதில் அனுப்பிக்கிறேன் என்று கூறி என்னை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். குடிமங்கலம் காவல் நிலையத்திலும், காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார் பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியி ருப்பதாவது, தமிழ்நாடு பாஜக பொறுப் புக்குழு தலைவர் எச்.ராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந் தியை தேசவிரோதி என கூறி இருக் கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவரை பயங்கரவாதி என்று அழைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விசிகவினர் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, சட்டவிரோதமாக முன்ப ணம் கொடுத்து, தென் குமாரபாளை யத்தை சேர்ந்த குமாரசாமி என்பவர், கடந்த மாதம் 407 சுமை வாகனத்தில் விவசாய வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்றபோது விபத்து ஏற் பட்டு உயிர் சேதம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களிடம் போலீஸில் கேஸ் ஏதும் கொடுக்க வேண்டாம். சிகிச் சைக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். அதனால் மேல் நடவடிக்கையாக யாரையும் அணு கவில்லை. விபத்தில் பாதிக்கப்பட்ட பட் டியலின மக்களை வருவாய் உயர் அதிகாரிகளோ, காவல்துறை கண்கா ணிப்பாளர் நேரில் சந்தித்து ஆறுதலோ, சட்ட உதவிகளோ எதுவும் செய்ய வில்லை. எனவே சட்டவிரோதமாக 407 சுமை வாகனத்தில் விவசாய வேலைக்கு அழைத்து சென்றவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது. ஏ.ராஜா என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் முதலி பாளையம், கெங்கநாயக்கன்பாளை யம் பகுதி ஆர்பிஎஸ் கார்டனில் முறைப் படி ஊராட்சி ஒன்றியத்தில் கட்டிட அனு மதி பெற்று 2017ஆம் ஆண்டு கிறிஸ்தவ வழிபாட்டு தளம் அமைக்கப்பட்டது. இதை முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் நடராஜ் திறந்து வைத்தார். அக்கம் பக்கத்தினருக்கு எந்தவிதமான இடை யூறும் இல்லாமல் வழிபாடு நடத்தி வரு கிறோம். இந்நிலையில் சரவணன் என் பவர் காவல் நிலையத்தில் வழிபாடு நடத் துவதால் அக்கம்பக்கத்தில் குடியிருப் பவர்களுக்கு தொந்தரவு செய்வதாக புகார் அளித்தார்.
எங்கள் சபை சார் பில் நேரடியாக சென்று எந்த இடையூ றும் ஏற்படாது என எழுதிக் கொடுத்து விட்டு வந்தோம். இந்நிலையில் செப்டம் பர் 22ஆம் தேதி வழிபாடு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஊத்துக்குளி காவல் நிலைய காவலர் சபையினரின் மூலம் என்னை வெளியே அழைத்து, காவல் ஆய்வாளரிடம் கைபேசி மூலம் பேச வைத்தார். அப் போது காவல் ஆய்வாளர் மாவட்ட ஆட் சியரிடம் அனுமதி பெற்ற பின்பு வாழி பாடு நடத்துங்கள் என்று கூறினார். அப் போது சரவணன் இந்த பகுதிக்கு அறி முகமே இல்லாத பத்துக்கும் மேற்பட்ட வர்கள் இந்து முன்னணி அடையாளம் இட்ட கொடியினை வாகனத்தில் கட்டி வைத்திருந்தனர். ஏற்கனவே ஜனநாயக மக்கள் கழகம் போயர் நாயக்கர் கூட்ட மைப்பு மூலமாக வழிபாட்டுத்தளத்தை அகற்றக்கோரிய சரவணன் தற்போது இந்து முன்னணி கொடியுடன் வந்தி ருப்பதை நாங்கள் பார்க்கும்பொழுது, மத கலவரத்தை உண்டாக்கும் நோக் கத்துடன் செயல்படுவது உறுதியாகி றது. எனவே சரவணன் மீது உரிய நட வடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (நிலம்) மலர், (தேர்தல்) ஜெய ராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி, துணை ஆட்சி யர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை களின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.