கோவை, நவ.20- பொள்ளாச்சி அருகே சுற்று சுவர் இல்லாமல் செயல்ப டும் அரசு ஆரம்பப்பள்ளியில் வனவிலங்கு நடமாட்டத்தால் பள்ளி குழந்தைகள் அச்சமடைந்து உள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழி யார் பகுதியில் கூலித்தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் மற் றும் அகதிகள் முகாமைச் சேர்ந்த பொதுமக்கள் என 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தை கள் படிப்பதற்கு ஆழியாரில் பொதுப்பணித்துறை அதிகா ரிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக துவக்கப்பள்ளி நடைபெற்று வந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 25 சென்ட் இடம் வாங்கி பொதுமக்கள் நிதி மற்றும் தமிழக அரசு வழங்கும் நிதி என ரூபாய் 24 லட்சத்தில் இந்த துவக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்வித் துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். இப்பள்ளியில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை என 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி யில் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். இப்பள்ளி யில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம், கழிப்பி டம் கட்டப்பட்டு உள்ளது. ஆழியார் அணை ஒட்டி மலை அடிவாரப் பகுதி என்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் உலா வருகிறது. பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் நிதி, கோட்டூர் பேரூராட்சி நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என இருந்தும் எவ்வித பயனும் இல்லை. கழிப்பிடம் செல்ல குழந்தைகள் பகல் நேரத்தில் கூட அச்சப்படுகின்றனர். பள்ளி குழந்தைகளின் நலன் கருதி சுற்றுச் சுவர் அமைத்து மின் விளக்குகள் பொருத்தித் தர வேண்டும். மேலும், சமூக விரோதிகள் கூடாரமாக மாறாமல் தடுக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.