திருப்பூர், நவ.23- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காங்கேயம் பாலர் பூங்கா சார்பில் வெள்ளியன்று குழந்தைகள் தின கொண்டாட் டம் நடைபெற்றது. பிரபு செபாஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியை, ரோஸி துவங்கி வைத்தார். பாலர் பூங்காவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து தங்கவேல் எடுத்துரைத்தார். குழந் தைகளை கவரும் வகையில், அறிவியல் அற்புதம் நிகழ்ச் சியை அஜித்குமார் செய்து காண்பித்தார். சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து ராமமூர்த்தி பேசினார். இந்நிகழ்வில் பாலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, மேகா, பூர்ணா ஸ்ரீ மற்றும் தனுஷ் ஈஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில், சஞ்சீவ் நன்றி கூறினார்.