districts

img

குழந்தை திருமணம், சாலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு: ஆட்சியர் வேதனை

நாமக்கல், ஜூலை 27- நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்பு மற்றும் பெற்றோரால்  நடத்தி வைக்கப்படும் குழந்தை திரு மணங்கள் அதிகரித்து வருவ தாக மாவட்ட ஆட்சியர் ச. உமா வேதனையுடன் தெரி வித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பாவை பொறியியல் கல்லூரி யில் சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்க ளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட் சியர் ச.உமா தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசு கையில், நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாது காப்பு விழிப்பணர்வு குழு 2018 ஆம் ஆண்டு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் மற் றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 178 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. சாலை பாது காப்புக்குழு உறுப்பினர்கள் மூலம் விபத்து ஏற்படாமல் தடுக்க பல்வேறு போட்டிகள், சாலை பாதுகாப்பு விழா, தலைக்கவசம் அணிவது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்ப டுத்தி வருகின்றது. வாகனங்களை வேகமாக இயக்கப்படுவதாலும், வாகனம் உரிமம், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டு வதாலும் ஏற்படும் விளைவுகளை அனை வரும் நினைவில் கொள்ள வேண்டும். நாமக் கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் இருசக்கர வாகனங்களில் விபத்து ஏற்பட்டு,  128 நபர்கள் இறந்துள்ளனர். 18 வயதிற்கு  கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதமும், அவர்களது பெற்றோர் களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும், 12 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப் பட்டு 25 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 234 சிறு மிகள் பள்ளிக்குச்செல்ல வேண்டிய வயதில், ஒரு குழந்தைக்கு தாயாகக்கூடிய நிலையில் உள்ளது வேதனை. இந்த எண்ணிக்கை என் பது மிக அதிகம். 18 வயதுக்கு கீழ் உள்ள திருமணமான 234 சிறுமிகளையும் கிராம சுகா தார செவிலியர் மூலமாக தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். இதில் 90 சதவிகிதம் பேர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திரும ணம் செய்யப்பட்டவர்கள் என்பதுதான் கூடு தல் வேதனை. அனைத்து பள்ளிகளிலும் பெற் றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வரும் நிலையில், பெற்றோர்களை அழைத்து 21  வயது நிரம்பிய பெண்ணிற்கே திருமணம் செய்ய வேண்டும் எனவும் 18 வயதிற்குள் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என வும் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெற்றோர் களை அழைத்து பேச வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில்  நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முரு கேசன் (வடக்கு), முருகன் (தெற்கு), கல்வி  நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடரா ஜன்,  அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி  மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்ட னர்.