திருப்பூர், ஆக. 22 - தமிழ்நாடு பல்கலைக்கழ கங்கள் மற்றும் கலை அறிவி யல் கல்லூரியில் இருக்கும் நாட்டு நலப்பணித் திட்ட மாண வர்கள் கலந்து கொள்ளும் மாநில இளைஞர் விழா சென் னையில் ஆக.24 முதல் 28ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. மொத்தம் 200 பேர் பங்கேற்கும் இவ்வி ழாவில் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மதுகார்த்திக் தேர்வாகியுள்ளார். இவர் இளங்கலை இரண்டாமாண்டு வணிகவியல் படிக்கிறார். அரசு நடத்திய அனைத்து கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றியதால் இவ்விழா விற்கு இவர் தேர்வாகியுள்ளார். அவரை செவ்வாயன்று கல் லூரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் அலகு-2 மாணவ, மாணவிகள் வழியனுப்பி வைத்தனர்.