districts

img

ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ ஜூலை 11 ஆம் முதல் துவக்கம்: அமைச்சர்

தருமபுரி, ஜூலை 5- ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல் வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அரசு விழா வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்க உள்ளார். இவ்விழாவுக்கான முன் னேற்பாடு பணிகள் குறித்து வியாழனன்று ஆய்வு மேற்கொண்ட வேளாண் மற்றும் உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகை யில், மகளிர் உரிமைத்தொகை பதிவு செய் யும் முகாம் தொப்பூரில் கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். அதேபோல பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணி களைத் தொடங்கி வைப்பதற்காக முதல் வர் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை வந்துள் ளார். வரும் ஜூலை 11 ஆம் தேதி ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திடும் வகையி லும், ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல் வர்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கி றார். மேலும், பல்வேறு முடிவுற்ற திட்டப்பணி களைத் தொடங்கி வைத்து பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார், என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, திமுக மாவட்டச் செயலாளர்கள் பி.பழனியப்பன், தடங்கம் பெ.சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.