உடுமலை, ஆக.12 - உடுமலையில் ரூ.1 கோடியே 91 லட்சத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்ப டுத்தும் வகையில் அறிவுசார் மைய கட்டி டத்தை தமிழ்நாடு முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திங்கட்கிழமை திறந்து வைத் தார். இது குறித்து நகராட்சி சார்பில் தெரிவித் தாவது, உடுமலைப்பேட்டை நகராட்சியில் உள்ள யு.கே.சி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.91 லட்சம் மதிப்பீட்டில் ஒரு சிறந்த அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி நாளிதழ்கள். மாத இதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான இதழ்கள் உள் ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு மான சுமார் 2572 புத்தகங்கள் உள்ளது. இந்த அறிவுசார் மையத்தை பயன்படுத்தி படித்து போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று அரசு பணிகளுக்கு செல்ல விரும்புவோருக் காக உடுமலைப்பேட்டை நகராட்சி யு.கே.சி நகரில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம் தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை திறந்து வைக்கப்படு கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கள் இம்மையத்தினை இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.