districts

img

வெள்ளத்திலிருந்து தென்மாவட்ட மக்களை பாதுகாப்போம்

கோவை, டிச.18- சென்னை மழை வெள்ள அனுப வத்தைக் கொண்டு, தென்மாவட்ட மக்களையும் மழை வெள்ளத்திலி ருந்து பாதுகாப்போம் என கோவை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில், 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்க, முதல் வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இதன்பின் 7 ஆயிரத்து 945  நபர்களுக்கு 110.51 கோடி ரூபாய்  மதிப்பிலான நடத்திட்ட உதவிகளை யும் முதல்வர் வழங்கினார். அப் போது அவர் பேசுகையில், “தென்னிந் தியாவின் மான்ஸ்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, கொஞ்சும் கொங்கு தமிழை கொண்டது. நான் பலமுறை கோவைக்கு வருகை தந்து பல நலத்திட்டங்களை துவக்கி வைத் துள்ளேன். இன்றைய தினம் (திங்க ளன்று) மக்களுடன் முதல்வர் என்ற  மகத்தான திட்டத்தை துவக்கி வைத்துள் ளேன். சென்னையில் 45 ஆண்டுக ளில் இல்லாத வகையில் மழை பெய் தது. அரசு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மற்றும் மழைக்கு பிறகு போர்க்கால அடிப்படையில் நடவடிக் கைகளை செய்தது. மழை நின்றதும் நிவாரண பணிகளை துவக்கினோம். மறுநாளே முக்கிய சாலைகளில் வெள்ளம் சீர் செய்யப்பட்டது. புறநக ரில் ஒரு சில பகுதிகளை தவிர நான் கைந்து நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தென்மாவட்டங்களில் கடு மையான மழை பெய்து வருகிறது.  அரசு இயந்திரம் தென்மாவட்டங்களில் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். சென்னை மழை அனுபவத்தை கொண்டு சிறப் பாக செயல்பட்டு, தென்மாவட்ட மக் களை காப்போம். அரசு திட்டங்களின் பயன்கள் கடைகோடி மனிதனுக்கும் போய்ச்சேர வேண்டுமென கள ஆய் வில் முதலமைச்சர் திட்டத்தை துவக் கினேன். சம்மந்தப்பட்ட மாவட்டங்க ளுக்கு சென்று ஆய்வு செய்த போது, பொதுமக்கள் பயனடைவதை பார்க்க  முடிகிறது. மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளான 13 துறைகளை உள் ளடக்கி ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தொழிநுட்பங் களை பயன்படுத்த மக்களுக்கு சில சிர மங்கள் இருந்தது. அச்சிரமங்களை களைந்து மக்களுக்கு உதவும் வகை யில் உருவாக்கிய புதிய திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம். காரணம் சொல்பவன் காரியம் செய்யமாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள்  அளிக்கும் அனைத்து விண்ணப்பங்க ளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஏதோ காரணங்களை சொல்லி தட்டி கழிக்கக்கூடாது. ரூ.133.21 கோடியில் செம்மொழி பூங்கா கடந்த 2010 ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலைஞர் அறிவித்த 15 அறிவிப்புகளில் ஒன்று தான் செம்மொழி பூங்கா திட்டம். இது பொதுமக்கள் இயற்கையை தெரிந்து கொள்ளவும், அனுபவிக்கும் வகை யில் அமைக்கப்படும். இங்கு நீலகிரி உயிர் கோள மண்டலத்தில் உள்ள  

அரிய வகை தாவரங்கள் பாதுகாக்கப் படும். இது முதற்கட்டமாக 45 ஏக்கரி லும், இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இப் பூங்காவில் உலகத்தரத்துடன் கூடிய பல சிறப்புகள் அடங்கி இருக்கும். இங்கு செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம் உள்ளிட்ட 23 வனங் கள் அமைக்கப்படும். சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவ மனை, மதுரையில் நூலகம், சிவ கங்கையில் கீழடி அருங்காட்சியகம், திருநெல்வேலியில் பொருநை அருங் காட்சியகம், கோவையில் செம்மொழி பூங்கா என ஒவ்வொரு மாவட்டத்திற் கும் பார்த்து பார்த்து திட்டங்களை செய்து வருகிறோம். அரசு வேறு, மக் கள் வேறு அல்ல. நாடும், மக்களும் சேர்ந்து வளர வேண்டும். உலகமே வியந்து பார்க்கும் மாநிலமாக்க எனக்கு நானே உழைத்து வருகிறேன். இந்த காட்சியை விரைவில் காண்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாநி லங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முதல்வரின் முக வரி திட்ட சிறப்பு அலுவலர் ஷில்பா பிர பாகர் சதீஷ், மக்களுடன் முதல்வர் சிறப்புப்பணி அலுவலர் மதுசூதன் ரெட்டி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.