சென்னை, ஆக. 8 - மதுரையில் ஆக. 8 முதல் 11 ஆம் தேதி வரை 4 நாட்கள் ‘மா மதுரை விழா’ நடை பெறுகிறது. தொல்லியல் பயணம், மதுரை கலைத் திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்து பயணம், பலூன் திருவிழா, உணவுத் திரு விழா, வாணவேடிக்கை நிகழ்ச்சி, கிரிக்கெட், கால் பந்து போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் இந்த விழாவில் நடைபெறுகின்றன. இதன் துவக்கவிழா, வியாழனன்று காலை மதுரை தமுக்கம் மைதான அரங்கில் சு. வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடை பெற்றது. விழாவை காணொளி வாயிலாக துவங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் உரையாற்றினார். வணி கவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநக ராட்சி துணை மேயர் தி. நாக ராஜன், சட்டமன்ற உறுப்பினர் கள் தளபதி, பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையர் ஜெ. லோக நாதன் அரசு உயர் அலுவலர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அகமது வர வேற்று பேசினார். விழா தலைவர் விக்ராந்த் கார்மே கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து தமுக்கம் மைதானம் மாநாட்டு அரங் கில் அமைக்கப்பட்டிருந்த மதுரை மாவட்டம் குறித்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார். பின்னர் இரண்டு அடுக்குப் பேருந்துப் பய ணத்தை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாக ராஜன் துவக்கி வைத்தார் செல்லூர் - சிம்மக்கல் இணைப்பு பாலத்தில் பட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையை சேர்ந்த பலரும் வண்ண வண்ண பலூன்களை வான த்தில் பறக்கவிட்டு பொது மக்களை மகிழ்வித்தனர்.
‘மா மதுரை’ விழாவை துவங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: அப்போது, “திங்களைப் போற் றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங் கோவடிகள் எழுதினார். இப்போது, மா மதுரை போற்று வோம், மா மதுரை போற்று வோம் என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு. வெங்கடேசன் எம்.பி. இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்” என்று பாராட்டினார். “இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நகரம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம். ‘தவறு செய்தவன் மன்னனே ஆனா லும்’ என மன்னனையே கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தா ளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்க டேசன் முயற்சியால் மா மதுரை போற்றுவோம் விழா துவங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட ‘இந்திர விழா’ போல இவை நடத்தப்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல... எல்லோரும் போற்றலாம். மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம். சாதி, மத வேறுபாடுகளுக்கு இட மளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோ ரும் கொண்டாட வேண்டும். மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இது போன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.