districts

img

ரத்தசோகையால் கோழிகள் இறக்க வாய்ப்பு

நாமக்கல், ஜன.18- ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்து வக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த வார  வானிலையை பொருத்தமட்டில், பகல் மற் றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே  87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 68 டிகிரி யாகவும் காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத் தில் மழை எங்கும் பதிவாகவில்லை. அடுத்த  ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம்  பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஜன.19, 20 தேதிகளில் மாவட் டத்தின் சில இடங்களில் மிதமானது முதல்  கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படு கிறது. பகல் வெப்பம் 80.6 டிகிரிக்கு மிகாம லும், இரவு வெப்பம் 66.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கி லிருந்து மணிக்கு 12 கி. மீ. வேகத்தில் வீசக் கூடும். மேலும், கோழியின நோய் ஆய்வகத் தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்த தில், அவற்றில் பெரும்பாலும் இறக்கை  அழுகல், ரத்தசேகை நோய் தாக்கத்தால்  பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந் துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண் ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப் லோகாக்கஸ், ஈ கோலை ஆகியவற்றின் தாக் கம் உள்ளதா? என பரிசோதனை செய்து  அதற்கு தகுந்தாற்போல தீவன மேலாண்மை  முறைகளை கையாள வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.