districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சவுக்கு சங்கருக்கு குற்றப்பத்திரிக்கை நகல்

கோவை, ஜூலை 18- பெண் காவலர்களை அவதூறு செய்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு, குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கி, 10 நாட்க ளுக்குள் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பெண் காவலர்களை அவதூறாக பேசிய தாக சவுக்கு சங்கர் மற்றும் தனியார் யூடியூப்பர் பெலிக்ஸ்  ஜெரால்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டனர். இவ்வழக்கு கோவை 4 ஆவது குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், விசாரணைக்காக வியாழனன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. 55 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், சவுக்கு சங் கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் தங்கள் யூடியூப் சேனல்களில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக வும், அவர்களின் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் குந்த கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், அவர்களை  இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பெண் காவலர்களை பற்றி தவறான தகவல்களை பரப்பியதாக வும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு வழங்கப் பட்ட குற்றப்பத்திரிக்கை நகல் மீது சந்தேகம் அல்லது ஆட் சேபனை இருந்தால், 10 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் 26 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கம்

சேலம், ஜூலை 18- தாம்பரம் ரயில்வே நிலைய யார்டில் தண்டவாள சீர மைப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் 26 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தாம்பரம் ரயில்வே நிலைய யார்டில் சீர மைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தண்டவா ளம், சிக்னல்கள் மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதனால்,  இந்த மார்க்கத்தில் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் வரும் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆக.17 ஆம்  தேதி வரை 26 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப் படும். சென்னை எழும்பூருக்கு அடுத்து சென்னை கடற்கரை,  அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு வழித் தடத்தில் இயக்கப்படும். இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்க ளில் இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு செல் லாது.

இதேபோல, மங்களூரு - சென்னை எழும்பூர் விரைவு ரயில், சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஆகியவை வரும் ஆக.17 ஆம் தேதியன்று மட்டும் மாற்றுப்பாதையாக செங்கல்பட்டு வழித்தடத்தில், அதாவது காஞ்சிபுரம், அரக் கோணம், சென்னை கடற்கரை வழியே எழும்பூருக்கு இயக் கப்படும். குறிப்பிட்ட நாளில் மட்டும் தாம்பரம் வழியாக இயக் கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

தருமபுரி, ஜூலை 18- பாலக்கோடு மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவி னால், விலை உயர்ந்து கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல் லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் தினசரி சராசரியாக 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டு, உள்ளூர் தேவைக்குப்போக பிற மாவட்டங்களுக்கும், கேரளம், கர்நாடகா மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலை யில், தற்போது தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிப் படைந்துள்ளது. மேலும், தொடர்ந்து கோவில் திருவிழாக் கள் பண்டிகை நாட்கள் வருவதையொட்டி தக்காளியின் விலை உயர்ந்து, மார்க்கெட்டில் 15 கிலோ எடைகொண்ட ஒரு  கூடை தக்காளி ரூ.970க்கும், ஒரு கிலோ ரூ.65க்கும், உழவர் சந்தையில் ரூ.68க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு  கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில வாரங்களில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் இருவர் பலி

கோவை, ஜூலை 18- கணியூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சுவரில் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் என்பவர், கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் திருப்பூரில் பள்ளியில் படித்த நண்பர்கள் நரேன், பிரணவ், பூபேஷ் உள்ளிட்ட 5 பேர் கோவை யில் சந்தித்துள்ளனர். அவர்கள் 5 பேரும் உணவகத்தில் சாப் பிட்டு விட்டு காரில் மீண்டும் திருப்பூர் திரும்பியுள்ளனர். இந் நிலையில், காரில் திருப்பூர் நோக்கி சென்றபோது, கணியூர் டோல்கேட்டை தாண்டியவுடன் கார் கட்டுப்பாட்டை இழந்து, சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், விஷால் மற்றும் பூபேஷ் என்ற இரண்டு மாணவர்கள் சம்பவ  இடத்திலே உயிரிழந்தனர். நரேன், பிரணவ் மற்றும் ஒரு மாண வர் காயம் அடைந்தனர். நரேன், பிரணவ் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையிலும், மற்றுமொரு மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அ ளிக்கப்பட்டு வருகின்றது. கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அணைகள் நிலவரம் (வியாழக்கிழமை)

பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:31.30/72 அடி
நீர்வரத்து:3224 கனஅடி
நீர்திறப்பு:57 கனஅடி
மழையளவு:44 மிமீ
சோலையார் அணை
நீர்மட்டம்: 150/160அடி
நீர்வரத்து: 7017கனஅடி
நீர்திறப்பு:1039கனஅடி
மழையளவு: 99 மிமீ
ஆழியார் அணை 
நீர்மட்டம்:101/120அடி
நீர்வரத்து:3814கனஅடி
நீர்திறப்பு:84 கனஅடி
மழையளவு:15.2 மிமீ
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:28.34/60அடி 
நீர்வரத்து:11கனஅடி
நீர்திறப்பு: 28கனஅடி
மழையளவு: 8 மிமீ
அமராவதி அணை
நீர்மட்டம்:83.17/90அடி
நீர்வரத்து:4867கனஅடி
நீர்திறப்பு:119கனஅடி
மழையளவு: 1 மிமீ
மழையளவு
வால்பாறை:109 மிமீ
அப்பர் நீராறு:152 மிமீ
லோயர் நீராறு:97 மிமீ
காடம்பாறை: 26 மிமீ

ஓடும் பேருந்திலிருந்து கழன்றோடிய சக்கரம்!

நாமக்கல், ஜூலை 18- பள்ளிபாளையம் அருகே தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து, அதன் முன் சக்கரம் கழன் றோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற் காக புதனன்று மாலை புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ராஜா இயக்கியுள்ளார். வரும் பாதையில் பேருந்து பழுதானதால் பயணிகளை, மாற்று வண்டியில் அனுப்பி  வைத்தனர். இதன்பின் பேருந்தில் ஓட்டுநர்  ராஜாவும், நடத்துநர் மாயக்கண்ணனும் பழுத டைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். குமார பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான,  சிவசக்தி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது, பேருந்தின் முன் சக்கரம் கழன்று,  அருகிலிருந்த கடைக்குள் புகுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார்ச்சாலையில் மோதி தீப்பொறி கக்கியபடி வேகமாக வந்தது. ஆனால், பேருந் தின் ஓட்டுநர் ராஜா சாமர்த்தியமாக வாக னத்தை சாலையின் ஓரமாக திருப்பி நிறுத்தி யதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச் சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற பேருந்து களை கண்டறிந்து பழுது நீக்கும் நடவடிக் கைகளை மேற்கொண்டு, பயணிகள் மற் றும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகாரி கள் உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
விநாயகர் சிலைகளை தடை செய்திடுக

சேலம், ஜூலை 18– சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் விநாயகர் சிலைகளை தடை செய்ய  வேண்டும் என சேலம் மாவட்ட குலாலர் சங் கம் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள் ளது.

வரும் செப்.7 ஆம் தேதியன்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் செய்யும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் கொண் டலாம்பட்டி, உத்தமசோழபுரம், உடையாப் பட்டி உள்ளிட்ட இடங்களில் தமிழக அர சால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப்  பாரிஸ் விநாயகர் சிலைகள் வடமாநில மக்க ளால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த  வகையிலான சிலைகளை பயன்படுத்தி நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும். எனவே, சிலை உற்பத்தி செய்யும் முறையில் உள்ள கட்டுப்பாடுக ளையும், திட்டங்களையும் தமிழக அரசு முன் கூட்டியே வெளியிட வேண்டும். சுற்றுச்சுழ லுக்கு மாசு ஏற்படுத்தும் இந்த வகையான சிலைகளை தடை செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சேலம் மாவட்ட குலாலர், மண்பாண் டம், விநாயகர் சிலை, பொம்மைகள் தயா ரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங் கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், அச்சங்கத் தின் தலைவர் கண்ணன், கௌரவத் தலை வர் முருகன், செயலாளர் மாணிக்கம், பொரு ளாளர் தங்கராஜ் ஆகியோர் உடனிருந்த னர்.

பட்டியலின மாணவர் மீது தாக்குதல்
வன்கொடுமை சட்டத்தில் 2 பேர் மீது வழக்கு

சேலம், ஜுலை 18- கோவில் திருவிழாவின் போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பட்டியலின மாணவர் மீது  தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அன்பு நகர் பகுதியை சேர்ந்த பட்டிய லின வகுப்பை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, விசா ரெட்டியூர் பகுதியை சார்ந்த ஆதிக்க சாதியினர் மாணவர் வேகமாக சென்றதாக கூறி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் காயமடைந்த மாண வர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணையில், மாணவர் வேகமாக வாகனத்தில் வந்ததால் அங்கு இருந்தவர்கள் மெதுவாக செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதன் பின்னர் மாணவரை, ஆதிக்க சாதியை சேர்ந்த சேட்டு, அஜித், பானு ஆகி யோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய  இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள னர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாண வர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் பால் ஊற்ற அப்பகுதிக்கு சென்றதா கவும், அப்போது அங்கிருந்த சிலர் சாதியை சொல்லி இழிவாக பேசி வம் புக்கு இழுத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.