districts

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 31-தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 2  நாட்களில்,  குறிப்பாக தேனி, நெல்லை, கிருஷ்ணகிரி, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்ப லூர், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக  இருக்கும். சென் னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.