ஈரோடு, ஆக. 10- ஒன்றிய அரசின் மூன்று குற்றவி யல் சட்டத்தை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் சாசன விழுமியங்க ளைப் பாதுகாப்போம், மூன்று கொடிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், தொழி லாளர் உரிமைகளைப் பறிக்கும் நான்கு சட்ட தொகுப்புகளை திரும் பப் பெற வேண்டும், விவசாயி களின் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக் கள் விரோத, தேச விரோத கொள் கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என்கிற முழக்கத்து டன் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. முன்னதாக, ஈரோட்டில் மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த மத்திய தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பினர், ஒன் றிய மோடி அரசின் மூன்று கொடிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து, பன்னீர் செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, மூன்று குற்றவி யல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற னர். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, சட்ட நகல்களை பறித்தனர். இதனைத்தொடர்ந்து, ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, எல்பிஎப் செ. கோபால், எச்எம்எஸ் ஜுவா பி.சண் முகம், ஏஐசிசிடியு ஜெ.பி.கார்த்தி கேயன், எம்எல்எப் எஸ்.எஸ்.காளி யப்பன், எல்டியுசி ஏ.கோவிந்தராஜ் மற்றும் டிடிஎஸ்எப் குணசேகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். கோவை இதேபோன்று ஒன்றிய அர சின் மூன்று குற்றவியல் சட்டங் களை கண்டித்து இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோவையில் சனியன்று சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத் திய தந்தி அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில், சிபிஐ மாநி லப் பொருளாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜே.ஜேம்ஸ், எம்.குணசேகர், மாவட்டப் பொருளாளர் சி.தங்க வேல் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, சட்ட நகல்களை எரிக்க முயன்ற போது காவல்துறை யினர் போராட்டக் காரர்கள் கையில் இருந்த சட்ட நகல்களை பறித்துச் சென்றனர்.