பெண்களை மையப்படுத்தி கந்துவட்டிக்கு கொடுப்பது, பணம் கட்ட தாமதமானால், பெண் களை அவமானப்படுத்துகிற சம்ப வங்கள் சேலம் மாவட்ட ஊரக பகுதிகளில் ஏராளமான சம்பவங் கள் நடைபெறுகிறது. கந்து வட்டி கும்பலை தடுக்க வேண்டிய காவல் துறை, அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்ற னர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கந்து வட்டி கொடுமை தலை தூக்கி உள்ளது. குறிப்பாக ஆண்கள் இல்லாத நேரத் தில் பெண்களை குறி வைத்து கந்து வட்டி மாபியாக்கள், பெண்களை அவமானப்படுத்தும் சம்பவம் அதி கரித்துள்ளது. இமாலய வட்டி தாரமங்கலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் ராஜா முத்தையா மற் றும் தாமோதரன் ஆகியோர் அப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கந்து வட்டி விடுபவரிடம், ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். 20 நாட்களுக்கு 24 ஆயிரத்து 500 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி யுள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குள் ராஜா முத்தையா மற்றும் தாமோ தரன் ஆகியோரால், பணம் ஒப்ப டைக்க முடியவில்லை. இதனால் பணியாற்றும் ஜவுளி கடைக்கு வந்து அவமானப்படுத்தி சென்றுள்ளனர். மேலும், ஆண்கள் யாரும் இல்லாத தால் ராஜா முத்தையா மற்றும் தாமோதரன் இருவரின் மனைவி களிடம், ஆபாசமான அருவருக்கத் தக்க வார்த்தை பேசியுள்ளனர். மேலும் உடனடியாக பணம் வரா விட்டால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள் ளனர். மேலும், ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக ரூ24,500 வட்டியை வாங்கிக்கொண்டு கடையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆடை களை வாரிச்சுருட்டி, மூன்று கடை களையும் பூட்டி சாவிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதி களில் பிரதான தொழிலாக தற் போது கந்து வட்டி தொழில் குறிப்பிட்ட சில நபர்களால் படுஜோராக செய் யப்பட்டு வருகிறது, இதனால் எண் ணற்ற ஏழை எளிய நடுத்தர மக் கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும்போது தாரமங்கலம் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பாதிக்கப் பட்ட ராஜா முத்தையா மற்றும் தாமோ தரன் மற்றும் இவர்களின் மனை விகள் தாரமங்கலம் காவல் நிலை யத்தில் இரவு நேரத்தில் புகார் கொடுக்க சென்ற போது அந்த புகார் மனுவை காவல்துறையினர் ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த பிரச்சனை சம்பந்தமாக அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்த முன்வராத பட்சத்தில் பாதிக் கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவல கத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவல கத்தில் புகார் மனுவினை அளித் துள்ளனர்.
இதுகுறித்து சமூக செயற்பாட்டா ளர்கள் கூறுகையில், கந்து வட்டி கொடுமையிலிருந்து பொதுமக் களை பாதுகாக்க, கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தனி சட்டம் இயற்றப்பட்டது. இந்த கந்து வட்டி தனிச்சட்டம் தற்போது கேள்விக் குறியாகி உள்ளது. காவல் நிலை யங்களில் இப்பிரச்சனை சம்பந்த மாக முழுமையான விசாரணை நடத்தப்படுவதில்லை. சட்டத்தின்படி தினசரி வட்டி, மணி வட்டி, மீட்டர் வட்டி, தண்டல்,கந்துவட்டி என்ற ஐந்து வகையான வட்டிகளுக்கு இந்த சட் டம் கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்துள்ளது. குறிப்பாக மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண் டனை அளிக்க இந்த சிறப்பு சட் டத்தில் அதிகாரம் உள்ளது. மேலும் பிரச்சனை குறித்து குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அணுகி கடன் வாங்கியவர்களிடம் கொடுக்க வேண்டிய பணத்தை நீதி மன்றம் மூலமாக அரசு நிர்ணயித்த வட்டி கணக்கில் திரும்ப வழங்கிட லாம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அனைத்து சாராம்சங்களையும் தமிழக அர சும், காவல்துறையும் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொது மக்களை கந்து வட்டி கொடுமையில் இருந்து பாது காக்க வேண்டும் என்பது அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது. -எழில்