districts

img

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் தோழர் எம்.சி.கோவிந்தராஜ் முதலாம் ஆண்டு நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்வு மாதவரம் கம்பன்நகரில் ஞாயிறன்று (நவ.24)  நடைபெற்றது. பாலபண்ணை கிளைச் செயலாளர் கே.சி.ஏ.கருத்திருமன் தலைமையில், தோழர் எம்.சி.கோவிந்தராஜ் கல்வெட்டை சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் திறந்து வைத்தார். செங்கொடியை மூத்த உறுப்பினர் ஆர்.ஜோதி ஏற்றினார். இதில் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ஆனந்தன், ஏ.தமிழ்ச்செல்வி மற்றும் மா.தா.பால்ராஜ், பி.லூர்து, டி.சாரதி, எஸ.தேவராஜ், ஆர்.தாமோதரன், அங்கையற்கன்னி, ஆர்.மாஸ்கோ, எஸ்.மனோகரன், ம.நாதன், எம்.சி.துரைராஜ் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

;